இந்த வாழ்வில் மிகவும் பெறுமதியானது எது?

 இந்த வாழ்வில் மிகவும் பெறுமதியானது எது ?

இது இலகுவான கேள்விதான். ஆனால் இதற்கான பதிலை கண்டு கொள்வது மிகவும் கடினமானது. அல்லது குழப்பமானது. அல்லது எம்மால் இயலாதது


இந்த உலகத்தில் மிகப் பெறுமதியானது கல்விதான் என்று எமது பெற்றோர் சொல்லியிருப்பார்கள். இந்த உலகத்தில் மிகப் பெறுமதியானது அழகிய பண்பாடுகள் என்று ஆசிரியர்கள் சொல்லிருப்பார்கள். சிலவேளை காதலித்திருந்தால்  அவர்களோடு கழிக்கும் அந்த ஐந்து நிமிடம் தான் இந்த உலகில் மிகப் பெறுமதியானதாக இருந்திருக்கும்.

நம் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கைதான் இந்த உலகத்திலேயே மிகப் பெறுமதியானது என நான் நினைக்கின்றேன். நம்மை யார் நம்பினாலும், யார் எம்மை எள்ளி நகையாடினாலும் மனம் தளராது நம்மீது நாம் நம்பிக்கையுடன் புன்னகைப்பது தான் இந்த உலகத்தில் மிகப்பெரிய சாதனையாகும்.

யார் யாரையோ நேசிக்கும் நாம் எம்மையும் நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நம் மனம் விரும்பும் சில விஷயங்களையாவது செய்து கொள்ள முயற்சிக்க வேண்டும். நம்மை நாம் நம்ப வேண்டும். எப்போதும் நம்மோடு நாம் இருக்க வேண்டும். அதுதான், அதுதான் இந்த வாழ்வின் மகத்தான வெற்றி.


ஒரு போதும் மனம் தளர்ந்து விடாதீர்கள். உங்களுடன் உங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள்.


- நபீல் அபாபீல்

Comments